null
வழக்கு பதிவு செய்யக் கோரிய நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு.. செபி முடிவு
- எதிர்க்கட்சிகள் சார்பில் தொடர்ச்சியாக வலியுறத்தப்பட்டு வந்தது.
- ஒழுங்குமுறை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டும்.
அதானி குழுமம் பங்குச் சந்தையில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி தலைவர் மாதபி பூரி புச்-க்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டி இருந்தது.இந்த விவகாரத்தில் மாதபி பூரி புச் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் தொடர்ச்சியாக வலியுறத்தப்பட்டு வந்தது.
அதன்படி, செபி முன்னாள் தலைவர் மாதபி புரி புச் மற்றும் 5 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மும்பை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செபி முன்னாள் தலைவர் மாதபி புரி புச் மற்றும் 5 பேர் மீது மீது பங்குச் சந்தை மோசடி மற்றும் ஒழுங்குமுறை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி சஷிகாந்த் ஏக்நாத் ராவ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி 30 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று பத்திரிகையாளர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக செபி அறிவித்துள்ளது. விளையாட்டுத்தனமான மனு மீது நீதிமன்றம் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளதாக செபி தெரிவித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று செபி தெரிவித்து இருக்கிறது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக செபியிடம் எந்த கருத்தும் கேட்கப்படாமல் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக செபி குற்றம்சாட்டியுள்ளது.