புதுச்சேரி

காரைக்கால் கலெக்டர் மாற்றம்- புதுச்சேரி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு புதிய இலாகாக்கள் ஒதுக்கீடு

Published On 2025-02-03 13:52 IST   |   Update On 2025-02-03 13:52:00 IST
  • அரசு செயலர் சுந்தரேசனுக்கு சமூகநலம், பிற்படுத்தப்பட்டோர்நலம், பொருளாதாரம், புள்ளியியல்துறை, இளைஞர் நலம் விளையாட்டுத்துறை, பாண்கேர் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • சோமசேகர அப்பாராவ் காரைக்கால் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி:

புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகருக்கு தொழில் வளர்ச்சி, வனம், வனத்துறை, கல்வி, அறிவியல் தொழில் நுட்பத்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

அரசு செயலர் முத்தம்மாவுக்கு, திட்டம் மற்றும் ஆராய்ச்சி, போக்குவரத்து, மின்சாரம், குடிமைப்பொருள் வழங்கல்துறை, பொதுப்பணி, தகவல் தொழில்நுட்பம், ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது.

காரைக்கால் கலெக்டர் மணிகண்டன், புதுச்சேரி கவர்னரின் செயலராகவும், கூடுதலாக சுற்றுலா, மீன்வளத்துறை செயலராகவும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அரசு செயலர் சுந்தரேசனுக்கு சமூகநலம், பிற்படுத்தப்பட்டோர்நலம், பொருளாதாரம், புள்ளியியல்துறை, இளைஞர் நலம் விளையாட்டுத்துறை, பாண்கேர் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அரசு செயலர் ஜெயந்த்குமார் ரேவுக்கு சுகாதாரத்துறை, குடும்பநலம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, ஸ்மார்ட் சிட்டி தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசு செயலர் நெடுஞ்செழியனுக்கு வேளாண், கால்நடைத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, வக்புவாரியம், கலை, பண்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு செயலர் கேசவனுக்கு பொது நிர்வாகம், நகர அமைப்பு குழுமம், வீட்டு வசதி, உள்ளாட்சி, தீயணைப்பு, செய்தி விளம்பரத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன், நகர மேம்பாடு, டி.ஆர்.டி.ஏ., வருவாய் சிறப்பு செயலர் பதவிகளை கூடுதலாக கவனிப்பார். சோமசேகர அப்பாராவ் காரைக்கால் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை கவர்னர் உத்தரவின்படி தலைமை செயலர் சரத்சவுகான் பிறப்பித்துள்ளார்.

Tags:    

Similar News