ஐ.பி.எல்.

வீடியோ: இன்னும் கொஞ்சம் விளையாடுங்க பாய்- தோனி ஓய்வு குறித்து பேசிய சாம்சன்

Published On 2025-02-20 08:35 IST   |   Update On 2025-02-20 08:35:00 IST
  • எம்.எஸ். தோனி மற்றும் சஞ்சு சாம்சன் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டர்.
  • இந்தியர்களின் மனநிலையே இன்னும் கொஞ்சம் கேட்பதுதானே.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி. இவர் தலைமையில் சென்னை அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றது. அவர் கடந்த சீசனுடன் கேப்டன் பதவியில் இருந்து இறங்கிய நிலையில், தற்போது இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சி.எஸ்.கே-வின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

தோனி, இந்த தொடருடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவார் என தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள், தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடுங்கள் என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் எம்.எஸ். தோனி மற்றும் சஞ்சு சாம்சன் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டர். அப்போது தோனியின் ஓய்வு குறித்து சஞ்சு சாம்சன், இன்னும் கொஞ்சம் விளையாடுங்க பாய் என கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து அவர் கூறியதாவது:-

எப்போதெல்லாம் தோனி, ஐபிஎல்-ல் இருந்து ஓய்வு பெறவேண்டும் என மக்கள் சொல்கிறார்களோ, அப்போதெல்லாம், 'இன்னும் கொஞ்சம் விளையாடுங்க பாய்' (Thoda Aur) என்றுதான் கேட்கத்தோன்றும். இந்தியர்களின் மனநிலையே இன்னும் கொஞ்சம் கேட்பதுதானே.

என்று சஞ்சு சாம்சன் கூறினார்.

Tags:    

Similar News