விளையாட்டு

சாக்லேட், பூ கொடுத்து வைஷாலியிடம் மன்னிப்பு கேட்ட உஸ்பெகிஸ்தான் கிராண்ட்மாஸ்டர்

Published On 2025-01-31 17:52 IST   |   Update On 2025-01-31 17:52:00 IST
  • நெதர்லாந்தில் டாடா ஸ்டீல் செஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
  • வைஷாலிக்கு நோடிர்பேக் கைகுலுக்க தவிர்த்தது கடும் சர்ச்சையாக மாறியது.

விஜ்க் ஆன் ஜீ:

நெதர்லாந்தில் டாடா ஸ்டீல் செஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரின் நான்காவது சுற்று போட்டியில் தமிழகத்தின் வைஷாலி, உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பேக் யாகுபோவ் உடன் விளையாடினார்.

இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன் வைஷாலி, உஸ்பெகிஸ்தான் வீரருடன் கைகுலுக்க முயன்றார். ஆனால் அவர் கைகுலுக்க மறுத்து விளையாட ஆரம்பித்தார்.

வழக்கத்தை மீறி வைஷாலிக்கு நோடிர்பேக் கைகுலுக்க தவிர்த்தது கடும் சர்ச்சையாக மாறியது. மதரீதியிலான காரணங்களுக்காக கை குலுக்கவில்லை என நோடிர்பேக் கூறினாலும், முந்தைய தொடர்களில் வீராங்கனைகளுக்கு கைகுலுக்கியதைச் சுட்டிக்காட்டி விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வைஷாலிக்கு பூங்கொத்து மற்றும் சாக்லேட்களை வழங்கி உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பேக் யாகுபோவ் மன்னிப்பு கேட்டார்.

Tags:    

Similar News