விளையாட்டு
சாம்பியன்ஸ் டிராபி தொடக்க விழாவில் கலந்து கொள்ள ஜெய் ஷாவிற்கு அழைப்பு
null

சாம்பியன்ஸ் டிராபி தொடக்க விழாவில் கலந்து கொள்ள ஜெய் ஷாவிற்கு அழைப்பு

Published On 2025-01-31 23:10 IST   |   Update On 2025-01-31 23:11:00 IST
  • கடந்த செப்டம்பர் மாதம் ஸ்டேடியத்தை இடித்துவிட்டு சீரமைப்பு பணி அக்டோபர் மாதம் தொடங்கியது.
  • கராச்சி ஸ்டேடியம் பிப்ரவரி 11-ந்தேதி அதிபர் ஆசிப் அலி சர்தாரியால் திறந்து வைக்கப்படும்.

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் மொஹ்சின் நக்வி இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடைபெறும் ஸ்டேடியத்தில் ஒன்றான கடாஃபி ஸ்டேடியம் பிப்ரவரி 7-ந்தேதி திறக்கப்படும். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடக்க விழாவில் கலந்து கொள்ள அனைத்து கிரிக்கெட் போர்டு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஐசிசி அதிகாரிகள், சேர்மன் ஜெய் ஷா ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

7-ந்தேதி பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் கடாஃபி மைதானத்தை திறந்து வைக்கிறார். தற்போது இறுதி கட்ட வேலைப்பாடு நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 7-ந்தேதிக்குள் முடிவடையும்.

கடந்த செப்டம்பர் மாதம் ஸ்டேடியத்தை இடித்துவிட்டு சீரமைப்பு பணி அக்டோபர் மாதம் தொடங்கியது. ஜனவரி மாதத்திற்குள் தயாராகிவிடும் என உறுதி அளித்தோம். வேலைகள் அனைத்தும் எப்படி முடிந்துள்ளது என்பதை உங்களால் பார்க்கமுடியும்.

கராச்சி ஸ்டேடியம் பிப்ரவரி 11-ந்தேதி அதிபர் ஆசிப் அலி சர்தாரியால் திறந்து வைக்கப்படும்.

இவ்வாறு நக்வி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News