டென்னிஸ்

மெரிடா ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கொலம்பிய வீராங்கனை

Published On 2025-03-03 00:06 IST   |   Update On 2025-03-03 00:06:00 IST
  • மெரிடா ஓபன் டென்னிஸ் போட்டி மெக்சிகோவில் நடைபெற்று வருகிறது.
  • அரையிறுதி சுற்றில் கொலம்பிய வீராங்கனை வெற்றி பெற்றார்.

மெக்சிகோ:

மெரிடா ஓபன் டென்னிஸ் போட்டி மெக்சிகோவில் நடைபெற்று வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதி சுற்றில் கொலம்பியாவின் எமிலியானா அரங்கோ, ஆஸ்திரேலியாவின் டாரியா சவேலி உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை 6-3 என வென்ற எமிலியானா 2வது செட்டை 4-6 என இழந்தார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 6-2 என கைப்பற்றிய எமிலியானா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதியில் பிரிட்டனின் எம்மா நவாரோ உடன் மோதுகிறார்.

Tags:    

Similar News