டென்னிஸ்
துபாய் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்
- ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ரஷியாவின் மெத்வதேவ் தோல்வி அடைந்தார்.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இன்று அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், இத்தாலி வீரர் மாட்டியோ பெரெட்டேனி உடன் மோதினார்.
இதில் சிட்சிபாஸ் 7-6 (7-5), 1-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.