டென்னிஸ்
துபாய் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் மெத்வதேவை வெளியேற்றிய நெதர்லாந்து வீரர்
- ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், நெதர்லாந்தின் டேலன் கிரீக்ஸ்பூர் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-2 என மெத்வதேவ் கைப்பற்றினார். இதில் சுதாரித்த கிரீக்ஸ்புர் அடுத்த இரு செட்களை 7-6 (9-7), 7-5 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் மெத்வதேவ் துபாய் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகினார்.
மெத்வதேவ் சமீபத்தில் நடந்த கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டியில் பாதியில் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.