டென்னிஸ்

கத்தார் ஓபன் சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்த பிரான்ஸ் வீரர்

Published On 2025-02-25 21:49 IST   |   Update On 2025-02-25 21:49:00 IST
  • ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
  • ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரூப்லெவ் தோல்வி அடைந்தார்.

துபாய்:

ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், பிரான்சின் குயிண்டின் ஹேலிஸ் உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை 6-3 என ரூப்லெவ் கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட ஹேலிஸ் அடுத்த இரு செட்களை 6-4, 7-6 (7-5) என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் முன்னணி வீரரான ரூப்லெவ் துபாய் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகினார்.

ரஷியா வீரரான ரூப்லெவ் சமீபத்தில் நடந்த கத்தார் ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News