டென்னிஸ்
துபாய் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்
- ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் கிரீஸ் வீரர் வெற்றி பெற்றார்.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், நெதர்லாந்து வீரர் டாலன் கிரீக்ஸ்பூர் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சிட்சிபாஸ் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் 5-7, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் பிரான்சின் ஹேலிசை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பெலிக்ஸ் ஆகர், சிட்சிபாஸ் உடன் மோதுகிறார்.