டென்னிஸ்

துபாய் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்

Published On 2025-02-28 23:58 IST   |   Update On 2025-02-28 23:58:00 IST
  • ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
  • ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் கிரீஸ் வீரர் வெற்றி பெற்றார்.

துபாய்:

ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், நெதர்லாந்து வீரர் டாலன் கிரீக்ஸ்பூர் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சிட்சிபாஸ் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதியில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் 5-7, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் பிரான்சின் ஹேலிசை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பெலிக்ஸ் ஆகர், சிட்சிபாஸ் உடன் மோதுகிறார்.

Tags:    

Similar News