டென்னிஸ்

துபாய் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினர் மெத்வதேவ், சிட்சிபாஸ்

Published On 2025-02-27 04:08 IST   |   Update On 2025-02-27 04:08:00 IST
  • ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
  • ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ரஷியாவின் மெத்வதேவ் வென்றார்.

துபாய்:

ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

இதில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரான்சின் பெரிகார்டு உடன் மோதினார்.

இதில் மெத்வதேவ் 6-4, 6-4 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 7-6 (7-4), 2-6, 6-4 என்ற செட் கணக்கில் ரஷிய வீரர் கச்சனாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News