டென்னிஸ்
துபாய் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றது யூகி பாம்ப்ரி ஜோடி
- ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்பொட்டியில் யூகி பாம்ப்ரி ஜோடி வென்றது.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-ஆஸ்திரேலியாவின் அலெக்சின் பாப்ரின் ஜோடி, பின்லாந்தின்ஹாரி ஹீலியோவரா-பிரிட்டனின் ஹென்றி பேட்டன் ஜோடி உடன் மோதியது.
இதில் முதல் செட்டை 3-6 என இழந்த யூகி பாம்ப்ரி ஜோடி, அடுத்த இரு செட்களை 7-6 (14-12), 10-8 என கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.