டென்னிஸ்

துபாய் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறியது யூகி பாம்ப்ரி ஜோடி

Published On 2025-02-27 22:29 IST   |   Update On 2025-02-27 22:29:00 IST
  • ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
  • ஆண்கள் இரட்டையர் காலிறுதியில் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.

துபாய்:

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

இதில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-ஆஸ்திரேலியாவின் அலெக்சின் பாப்ரின் ஜோடி, பிரிட்டனின் லாயிட், ஜூலியன் ஜோடி உடன் மோதியது.

இதில் முதல் செட்டை 7-5 என இழந்த யூகி பாம்ப்ரி ஜோடி அடுத்த இரு செட்களை 7-6 (7-5), 10-5 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

Tags:    

Similar News