விளையாட்டு

பிராக் மாஸ்டர்ஸ் செஸ்: 2வது வெற்றியை பதிவு செய்தார் பிரக்ஞானந்தா

Published On 2025-03-03 01:48 IST   |   Update On 2025-03-03 01:48:00 IST
  • பிரக்ஞானந்தா ஜெர்மனி வீரர் கெய்மரை வீழ்த்தினார்.
  • பிரக்ஞானந்தா தனது முதல் இரு ஆட்டங்களில் டிரா செய்திருந்தார்.

புதுடெல்லி:

பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக் குடியரசில் நடந்து வருகிறது. 9 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உள்பட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், இதன் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரைச் சந்தித்தார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.

பிரக்ஞானந்தா இதுவரை நடந்துள்ள 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 டிரா செய்துள்ளார். இதன்மூலம் மற்றொரு இந்திய வீரரான அரவிந்த் சிதம்பரத்துடன் முதலிடத்தைப் பகிர்ந்துள்ளார்.

Tags:    

Similar News