டென்னிஸ்
மியாமி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சபலென்கா
- மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்து வருகிறது.
- இதில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா அரையிறுதியில் வெற்றி பெற்றார்.
புளோரிடா:
மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான முதல் அரையிறுதி இன்று அதிகாலை நடைபெற்றது. இதில் நம்பர் 1 வீராங்கனையும், பெலாரசைச் சேர்ந்தவருமான அரினா சபலென்கா, இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி உடன் மோதினார்.
இதில் சபலென்கா 6-2, 6-2 என எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.