தமிழ்நாடு

செங்கல்பட்டு-கும்மிடிப்பூண்டி இடையே ரெயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Published On 2022-10-19 08:53 IST   |   Update On 2022-10-19 08:53:00 IST
  • செங்கல்பட்டு-கும்மிடிப்பூண்டி இடையே காலை 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி இடையே நாளை பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.
  • சூலூர்பேட்டை- சென்டிரல் இடையே மதியம் 12.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி மற்றும் சென்டிரல் இடையே நாளை பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.

சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை சென்டிரல் ரெயில் நிலையம்-கூடூர் ரெயில் நிலையம் இடையே நடைபெற்று வரும் பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

* செங்கல்பட்டு-கும்மிடிப்பூண்டி இடையே காலை 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி இடையே நாளை பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.

* சென்டிரல்- கும்மிடிப்பூண்டி இடையே மதியம் 12.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் மீஞ்சூர் மற்றும் கும்மிடிப்பூண்டி இடையே நாளை பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.

* கடற்கரை- சூலூர்பேட்டை இடையே மதியம் 12.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் மீஞ்சூர் மற்றும் சூலூர்பேட்டை இடையே நாளை பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.

* சூலூர்பேட்டை- சென்டிரல் இடையே மதியம் 12.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி மற்றும் சென்டிரல் இடையே நாளை பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.

* கும்மிடிப்பூண்டி- சென்டிரல் இடையே மதியம் 1.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி மற்றும் மீஞ்சூர் இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News