தமிழ்நாடு

சசிகலாவின் 'சடுகுடு' ஆட்டம்

Published On 2023-03-25 07:25 GMT   |   Update On 2023-03-25 07:35 GMT
  • ஓ.பன்னீர்செல்வம் அடுத்தக்கட்டமாக சசிகலாவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறார்.
  • ஓ.பி.எஸ்.சை சந்திக்கும்போது தமிழக அரசியல் களத்தில் புதிய சலசலப்பையும், புதிய உத்வேகத்தையும் உருவாக்க வேண்டும் என்று சசிகலா நினைக்கிறாராம்.

எடப்பாடி பழனிசாமி வசம் 99 சதவீதம் அ.தி.மு.க.வினர் இருக்கும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அடுத்தக்கட்டமாக சசிகலாவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறார். இதற்காக பல தடவை அவர் சசிகலாவிடம் தொடர்பு கொண்டார். சசிகலாவும்" சந்திக்கலாம்" என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார். ஆனால் அதற்கு இதுவரை நேரம் ஒதுக்கி கொடுக்கவே இல்லை.

இது ஓ.பன்னீர்செல்வத்தை விரக்தியின் உச்சத்தில் வைத்துள்ளது. சசிகலா எப்போது அழைப்பார்.? என்று காத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் சசிகலாவோ ஓ.பி.எஸ்.சை கண்டு கொள்ளவே இல்லை எப்போது கூப்பிட்டாலும் வருவார் தானே என்று சொல்லி காலம் கடத்திக் கொண்டே இருக்கிறார்.

ஓ.பி.எஸ்.சை சந்திக்கும்போது தமிழக அரசியல் களத்தில் புதிய சலசலப்பையும், புதிய உத்வேகத்தையும் உருவாக்க வேண்டும் என்று சசிகலா நினைக்கிறாராம். அந்த அடிப்படையில் தான் சடுகுடு ஆட்டம் ஆடிக்கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்....

Tags:    

Similar News