தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4- கூடுதலாக 480 காலி இடங்கள் சேர்ப்பு

Published On 2024-09-11 16:12 GMT   |   Update On 2024-09-11 16:12 GMT
  • குரூப் 4 எழுத்துத்தேர்வு கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது.
  • குரூப் 4 தேர்வு 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்கள் உள்ளன.

தமிழக அரசின் குரூப்-4 பதவிகளில் வரும் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநில உதவியாளர்- 2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து-தட்டச்சர்- 445, தனிப்பட்ட உதவியாளர், கிளர்க்- 3, தனி செயலாளர்- 4, இளநிலை நிர்வாகி- 41, வரவேற்பாளர்- 1, பால் பதிவாளர்- 15, ஆய்வக உதவியாளர்- 25, பில் கலெக்டர்- 66, தொழிற்சாலை மூத்த உதவியாளர்- 49, வன பாதுகாவலர், காவலர்- 1,177, இளநிலை ஆய்வாளர்- 1 ஆகிய 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கான, போட்டித்தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஜனவரி மாதம் 30-ந்தேதி வெளியிட்டது.

இந்த தேர்வுக்கு 6 ஆயிரத்து 244 பணியிடங்களுக்கு 20 லட்சத்து 37 ஆயிரத்து 101 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதாவது ஒரு பணியிடத்துக்கு சுமார் 326 பேர் போட்டியிடுகின்றனர்.

இவர்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது.

இந்நிலையில், நடந்து முடிந்த குருப் 4 தேர்வுக்கான பணியிடங்களில் கூடுதலாக 480 காலி இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இந்த புதிய அறிவிப்பால் காலியிடங்களின் எண்ணிக்கை 6,224ல் இருந்து 6,704ஆக உயர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News