தமிழ்நாடு
சட்டசபையில் கடும் அமளி- அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றம்

சட்டசபையில் கடும் அமளி- அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றம்

Published On 2025-03-28 10:56 IST   |   Update On 2025-03-28 10:56:00 IST
  • எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்கவில்லை என குற்றம்சாட்டி அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
  • நீங்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறேன் என முதலமைச்சர் பேசினார்.

சென்னை: 

தமிழக சட்டசபையில் இன்றைய அலுவல்களள் தொடங்கின. உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச தொடங்கினார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்கவில்லை என குற்றம்சாட்டி அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதை அடுத்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நீங்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். அதில் எந்த மாற்றமும் கிடையாது. டிவி பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன் சொல்வதற்கு தயாராக இல்லை என்றார்.

இதனை தொடர்ந்தும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அ.தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றுமாறு அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.

Tags:    

Similar News