தமிழ்நாடு
சட்டசபையில் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்

சட்டசபையில் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்

Published On 2025-03-27 12:16 IST   |   Update On 2025-03-27 12:23:00 IST
  • இருமொழிக்கொள்கை குறித்து அமித்ஷாவிடம் பேசிய எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி.
  • வக்பு வாரிய திருத்தச்சட்டத்திற்கு பா.ஜ.க.வை தவிர அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தனர்.

தமிழக சட்டசபையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தி தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்தது.

தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க.விற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி கூறினார்.

இருமொழிக்கொள்கை குறித்து அமித்ஷாவிடம் பேசிய எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி.

அடுத்த முறை டெல்லி செல்லும்போது வக்பு வாரிய திருத்தச்சட்டத்தை திரும்பப்பெறுமாறு வலியுறுத்துங்கள் என்று கூறினார்.

வக்பு வாரிய திருத்தச்சட்டத்திற்கு பா.ஜ.க.வை தவிர அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தனர்.

இதையடுத்து தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட வக்பு வாரிய திருத்தச்சட்டத்திற்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக அரசு கொண்டு வந்த தீர்மானத்தை கண்டித்து பா.ஜ.க. வெளிநடப்பு செய்தது.

Tags:    

Similar News