தமிழ்நாடு

வேளாண்மை பட்ஜெட்: உழவர்களின் நிலங்களில் விதைப் பண்ணைகள் அமைக்க ரூ.250 கோடி ஒதுக்கீடு

Published On 2025-03-15 10:54 IST   |   Update On 2025-03-15 10:54:00 IST
  • வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.215.80 கோடி நிதி ஒதுக்கீடு.
  • எண்ணெய் வித்து பயிர்களை அதிகரிக்கும் விதமாக ரூ.108 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்.

2025-26-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் கூறி இருப்பதாவது:

* பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ரூ.1.65 கோடி ஒதுக்கீடு.

* சுவை தாளிப்பு பயிர்களுக்கான சிறப்பு திட்டத்திற்காக ரூ.11.47 கோடி நிதி ஒதுக்கீடு

* பலா மேம்பாட்டு இயக்கத்திற்காக ரூ.3.75 லட்சம் நிதி ஒதுக்கீடு- அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

* புதிய பலா சாகுபடி உள்ளிட்ட திட்ட கூறுகளை ஊக்குவிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு

* வெண்ணை பழ உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.69 லட்சம் நிதி ஒதுக்கீடு.

* 17,000 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.215.80 கோடி நிதி ஒதுக்கீடு.

* சிறிய வகை வேளாண் கருவிகளுக்கான மானியம் ரூ.1.75 லட்சமாக உயர்வு

* சிறுகுறு உழவர்கள் பயனடையும் வகையில் மானிய விலையில் வேளாண் கருவிகள் வழங்கப்படும்.

* சிறுகுறு உழவர்கள் வேளாண் கருவிகள் வாங்க 60 சதவீதம் மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* உழவர்களின் நிலங்களில் விதைப் பண்ணைகள் அமைக்க ரூ.250 கோடி ஒதுக்கீடு.

* வேளாண் இயந்திர வாடகை மையங்கள் மூலம் குறைந்த வாடகையில் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* எண்ணெய் வித்து பயிர்களை அதிகரிக்கும் விதமாக ரூ.108 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News