வேளாண் பட்ஜெட்: தமிழகத்தில் சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக அதிகரிப்பு
- 55 ஆயிரம் உழவர்களுக்கு வேளாண் கருவிகள் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளன.
- கேழ்வரகு உற்பத்தியில் முதலிடத்திலும், கரும்பு உற்பத்தியில் 2-வது இடத்திலும் தமிழகம் உள்ளது.
சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் கூறி இருப்பதாவது:
* உழவர்கள் பாதுகாக்கப்பட்டால் அவர்கள் மக்களை பாதுகாப்பார்கள்.
* விவசாயத்துடன் உழவர்களின் நலனையும் மையப்படுத்தி வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
* வேளாண்மை அறிவியல் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு பல்கி பெருகி உள்ளது.
* உழவர்களின் வாழ்வில் வேளாண் பட்ஜெட் மேலும் வளர்ச்சியைத் தரும்.
* தமிழகத்தில் சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது.
* 55 ஆயிரம் உழவர்களுக்கு வேளாண் கருவிகள் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளன.
* ரூ.510 கோடி செலவில் உழவர்களின் வேளாண் கருவிகள் தேவை நிறைவேற்றப்பட்டுள்ளன.
* கேழ்வரகு உற்பத்தியில் முதலிடத்திலும், கரும்பு உற்பத்தியில் 2-வது இடத்திலும் தமிழகம் உள்ளது.
* இருபோக சாகுபடி பரப்பு 33 லட்சத்து 60 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
* இளைஞர்களுக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க தலா ரூ.1 லட்சம் வழங்கி ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது.
* 4 ஆண்டுகளில் 349 லட்சத்து 38 ஆயிரம் மெட்ரின் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.