தமிழ்நாடு
காரைக்காலில் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை- 3 பேர் கைது
- சிபிஐ அதிகாரிகள் மூட்டை மூட்டையாக ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
- ரூ.7 கோடி ஒப்பந்தத்திற்கு பல லட்சம் கமிஷன் பெற்றதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
காரைக்காலில் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விடிய விடிய சிபிஐ விசாரணை நடத்தியது.
புதுச்சேரி தலைமை பொறியாளர் தீனதயாளன், காரைக்கால் சாலை மற்றும் கட்டட செயற்பொறியாளர் சிதம்பரநாதன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து சிபிஐ அதிகாரிகள் மூட்டை மூட்டையாக ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
சிபிஐ நடத்திய விசாரணையில் ரூ.7 கோடி ஒப்பந்தத்திற்கு பல லட்சம் கமிஷன் பெற்றதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
அரசு தங்கும் விடுதியில் விடிய விடிய தொடர்ந்து 20 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்று தொடர்ந் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.