தமிழ்நாடு
வங்கிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை - பொதுமக்களே உஷார்!

வங்கிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை - பொதுமக்களே உஷார்!

Published On 2025-03-26 15:22 IST   |   Update On 2025-03-26 15:22:00 IST
  • மார்ச் 31 ஆம் தேதி திங்கள் கிழமை ரம்ஜானை ஒட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஏப்ரல் 1-ந்தேதி இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்பதற்காக மக்களுக்கான வங்கி சேவை வழங்கப்படுவதில்லை.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 30 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை வங்கிகளுக்கு பொதுவிடுமுறையாகும். மார்ச் 31 ஆம் தேதி திங்கள் கிழமை ரம்ஜானை ஒட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1-ந்தேதி இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்பதற்காக அன்று பொதுமக்களுக்கான வங்கி சேவை வழங்கப்படுவதில்லை.

நாடு முழுவதும் வங்கிகள் தொடர்ச்சியாக மூடப்படுவதால் ரொக்கம் மற்றும் காசோலை பரிவர்த்தனை கடுமையாக பாதிக்கப்படும்.

இதனால், அத்தியாவசிய வங்கி சேவைகளை மேற்கொள்ள விரும்புபவர்கள் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த விடுமுறை தினங்களில் மொபைல் பேங்கிங் மற்றும் யு.பி.ஐ., சேவை தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News