தமிழ்நாடு
பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு அநீதி: பிப்.8-ந்தேதி கண்டன பொதுக்கூட்டம்- தி.மு.க.
- தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்த மோடி அரசு.
- வருகிற பிப். 8-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்துக் கழக மாவட்டங்களின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும்.
தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
ஓரவஞ்சனையான நிதிப் பகிர்வு, தமிழ்நாட்டின் முக்கியத் திட்டங்கள் புறக்கணிப்பு, தமிழக முதலமைச்சரின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்குப் பிறகும், எஸ்.எஸ்.ஏ. பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்காதது, ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரைக் கூட உச்சரிக்காதது என நிதிநிலை அறிக்கையிலும் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்த மோடி அரசைக் கண்டித்து வருகிற பிப்ரவரி 8, சனிக்கிழமை, மாலை தமிழ்நாடு முழுவதும் அனைத்துக் கழக மாவட்டங்களின் சார்பில் "கண்டன பொதுக்கூட்டம்" நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.