தமிழ்நாடு

மாணவர்களின் கல்விக்கடன் ரூ.48.95 கோடி தள்ளுபடி- தமிழக அரசு அறிவிப்பு

Published On 2025-02-03 18:54 IST   |   Update On 2025-02-03 18:54:00 IST
  • கல்விக்கடனை வசூலிக்க இயலாத காரணத்தால் தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • ரூ.48.95 கோடியை சிறப்பினமாக கருதி முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிப்பு.

ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட கல்விக்கடன் ரூ.48.95 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 1972- 1973 முதல் 2002- 2003 வரையிலான காலங்களில் அனைத்து படிப்புகளுக்கும் வழங்கப்பட்ட கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது.

இதேபோல், 2003- 2004 முதல் 2009-2010 வரையிலான காலங்களில் வழங்கப்பட்ட கல்விக்கடன் நிலுவைத் தொகை தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவம், மருத்துவம் சார்ந்த படிப்புக்கு வழங்கப்பட்ட கல்விக்கடனை வசூலிக்க இயலாத காரணத்தால் தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கல்விக்கடன் வழங்கப்பட்ட மாணவர்கள் தொடர்பான ஆவணங்கள் இல்லாததால், நபர்களை அடையாளம் காண முடியாததால் தள்ளுபடி செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

ரூ.48.95 கோடியை சிறப்பினமாக கருதி முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Tags:    

Similar News