அ.தி.மு.க. தலைமை கழகத்தில் பிறந்த நாள் விழா: ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை
- சென்னையிலும் அதனையொட்டிய மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்.
- கட்சியில் உள்ள ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
சென்னை:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்களால் கொண்டாடப்பட்டது. அவரது உருவப் படத்தை முக்கிய பகுதிகளில் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். அன்னதானம், ரத்ததானம், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினார்கள்.
சென்னையில் அ.தி.மு.க. கட்சி தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் பிறந்த நாளை கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகம் வாழை மரம், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. தொண்டர்கள் காலையில் இருந்தே வரத் தொடங்கினார்கள். சென்னையிலும் அதனையொட்டிய மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகத்துக்கு வந்த போது திரண்டிருந்த தொண்டர்கள் புரட்சித் தலைவியின் புகழ் ஓங்குக! எடப்பாடி வாழ்க என கோஷங்களை முழங்கினர். அவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் தலைமை கழகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 77 கிலோ பிரமாண்ட கேக்கினை வெட்டினார்.
கட்சியின் தலைமை நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி கேக் வழங்கினார். அதனை தொடர்ந்து கட்சியில் உள்ள ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அவை தலைவர் தமிழ் மகன் உசேன், துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, பா.பென்ஜமின், சோமசுந்தரம், அப்துல்ரகீம், மாதவரம் மூர்த்தி, ரமணா, சின்னையா, மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, ஆதிராஜாராம், வெங்கடேஷ்பாபு, தி.நகர் சத்யா, வி.என்.ரவி, ஆர்.எஸ்.ராஜேஷ், கே.பி.கந்தன், அசோக், முன்னாள் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு மற்றும் சந்தான கிருஷ்ணன்.
கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை துணைச் செயலாளர், பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், ஆலந்தூர் கிழக்கு பகுதி செயலாளர் நங்கநல்லூர் வெ.பரணிபிரசாத், 193-வது வார்டு மாமன்ற உறுப்பினர் துரைப்பாக்கம் டி.சி.கோவிந்தசாமி, கழக மாணவர் அணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஆ.பழனி, தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட மாணவர் அணி செயலாளர் எம்.ராமலிங்கம், எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் டாக்டர் சுனில்.வி.ஆயிரம் விளக்கு முன்னாள் மாமன்ற உறுப்பினர் சின்னையன் (எ) ஆறுமுகம் வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட கழக பொருளாளர் வழக்கறிஞர் எம்.பாலாஜி, வடபழனி சத்திய நாராயண மூர்த்தி, மதுரவாயல் வடக்கு பகுதி செயலாளர் இமானுவேல், மதுரவாயல் வடக்கு பகுதி அம்மா பேரவை செயலாளர் முகப்பேர் இளஞ்செழியன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.