கடன் வாங்குவதில் சளைத்தவர்கள் அல்ல என தி.மு.க. அரசு நிரூபித்துள்ளது- இ.பி.எஸ்
- 100 நாள் வேலைத்திட்ட ஊழியர்களுக்கு ஊதிய அறிவிப்பு குறித்து பட்ஜெட்டில் இல்லை.
- பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதையும் தி.மு.க. அரசு அறிவிக்கவில்லை.
தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* 95 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக முதலமைச்சர் கூறுவது பொய்.
* 100 நாள் வேலைத்திட்ட ஊழியர்களுக்கு ஊதிய அறிவிப்பு குறித்து பட்ஜெட்டில் இல்லை.
* சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் ரூ.100 குறித்து அறிவிப்பு எங்கே?
* பெட்ரோல், டீசலுக்கான விலைக்குறைப்பு குறித்த வாக்குறுதி என்ன ஆனது?
* மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யப்படும் என்ற வாக்குறுதி குறித்த அறிவிப்பு இல்லை.
* பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.
* ரேசன் கடைகளில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை என்ற அறிவிப்பு இல்லை.
* கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.3.5 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ள தி.மு.க. அரசு.
* கடன் வாங்குவதில் சளைத்தவர்கள் அல்ல என தி.மு.க. அரசு நிரூபித்துள்ளது.
* பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதையும் தி.மு.க. அரசு அறிவிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.