தமிழ்நாடு
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 300 கன அடியாக சரிவு
- இன்று காலை நீர்வரத்து மேலும் சரிந்து வினாடிக்கு 300 கன அடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது.
- ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் ஆங்காங்கே பாறைகளாக காட்சியளித்தது.
ஒகேனக்கல்:
காவிரி கரையோரங்களில் மழையின் அளவு குறைந்ததாலும் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரானது முழுமையாக நிறுத்தப்பட்டதாலும் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்தது.
இந்த நிலையில் சில தினங்களாக வினாடிக்கு 1000 கன அடியாக நீர்வரத்து நீடித்து வந்த நிலையில் நேற்று வினாடிக்கு 700 கன அடியாக சரிந்தது.
இந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து மேலும் சரிந்து வினாடிக்கு 300 கன அடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் ஆங்காங்கே பாறைகளாக காட்சியளித்தது.