தமிழ்நாடு

சென்னை ராமாபுரத்தில் உள்ள பர்னிச்சர் குடோனில் பயங்கர தீ விபத்து

Published On 2025-03-16 20:10 IST   |   Update On 2025-03-16 20:10:00 IST
  • தீயை அணைக்கும் பணியில் விருகம்பாக்கம் உள்பட 4 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.
  • தீ விபத்தால் ராமாபுரம் சுற்றுவட்டாரம் முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை ராமாபுரம் அரசமரம் ஜங்ஷனில் அமைந்துள்ள பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீயை அணைக்கும் பணியில் விருகம்பாக்கம் உள்பட 4 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.

தீ விபத்தால் ராமாபுரம் சுற்றுவட்டாரம் முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் குடோன், கார் மெக்கானிக் கடை என அடுத்தடுத்து மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தீ பரவியதால் கொளுந்துவிட்டு எரிகிறது.

Tags:    

Similar News