தமிழ்நாடு
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி வழியாக கிண்டிக்கு மெட்ரோ ரெயில் சேவை?- அதிகாரிகள் தகவல்

தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி வழியாக கிண்டிக்கு மெட்ரோ ரெயில் சேவை?- அதிகாரிகள் தகவல்

Published On 2025-03-27 08:02 IST   |   Update On 2025-03-27 08:02:00 IST
  • விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்க தேசிய அளவிலான ஒப்பந்தப்புள்ளியை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கோரியுள்ளது.
  • ஒரு மணி நேரத்தில் 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய மிக அதிவேக ரெயில் சேவையை கொண்டு வரவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

சென்னை:

மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறும் போது, 'தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி வழியாக கிண்டி வரை 21 கிலோ மீட்டர் தூரத்துக்கும், கலங்கரை விளக்கத்தில் இருந்து தலைமைச் செயலகம் வழியாக சென்னை ஐகோர்ட்டு வரை 6 கிலோ மீட்டர் தூரத்துக்கும் மெட்ரோ ரெயில் 2-ம் கட்டத்தில் நீட்டிப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக இந்த வழித்தடத்தின் நீளம் எவ்வளவு? எத்தனை ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும்?, இந்த திட்டத்திற்கு ஏற்படும் செலவு? உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடங்கிய விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்க தேசிய அளவிலான ஒப்பந்தப்புள்ளியை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கோரியுள்ளது.

அதேபோல், பட்ஜெட் அறிவிப்பின்படி ஒரு மணி நேரத்தில் 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய மிக அதிவேக ரெயில் சேவையை கொண்டு வரவும் திட்டமிடப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து செங்கல்பட்டு வழியாக திண்டிவனத்திற்கு சுமார் 167 கிலோ மீட்டர் தூரத்திற்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரெயில் சேவையை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் இருந்து காஞ்சிபுரம் வழியாக வேலூருக்கு 140 கிலோ மீட்டர் தூரத்திற்கு 160 கிலோமீட்டர் வேகத்திலும், கோயம்புத்தூரில் இருந்து திருப்பூர் ஈரோடு வழியாக சேலத்திற்கு 185 கிலோ மீட்டர் தூரத்திற்கும் விரைவு ரெயில் சேவையை தொடங்குவதற்கான, விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய சென்னை மெட்ரோ ரெயில் நிறுனம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

இந்த 3 வழித்தடங்களில் விரைவு ரெயில் சேவையை உருவாக்க விரிவான சாத்தியக்கூறு அறிக்கை பெறப்பட்ட உடன் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அதிகாரிகள் கூறினர்.

Tags:    

Similar News