தமிழ்நாடு

செல்வம் பெருகும்.. ஜோதிடர் பேச்சை கேட்டு நாமக்கல் நரசிம்மர் கோயிலில் தியானம் செய்த மக்கள்

Published On 2024-12-16 12:45 GMT   |   Update On 2024-12-16 12:45 GMT
  • நாமக்கல் நரசிம்மர் கோயிலில் குவிந்த மக்கள் தியானத்தில் ஈடுபட்டார்கள்.
  • இதனால் கோயில்களின் நிர்வாகிகள் மிகுந்த குழப்பம் அடைந்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நரசிம்மர் கோவிலில் இன்று சுமார் 2000க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டதால் கூட்டநெரிசல் ஏற்பட்டது.

கோவிலில் குவிந்த பக்தர்கள் கோயில் வளாகம் முழுவதும் அமர்ந்து ஒரே இடத்தில் சுமார் ஒரு மணி நேரம் தியானத்திலும் ஈடுபட்டார்கள். இதனால் கோயில்களின் நிர்வாகிகள் மிகுந்த குழப்பம் அடைந்தனர்.

பின்னர் இது தொடர்பாக பக்தர்களிடம் விசாரித்துள்ளனர். அப்போது, சமூக வலைத்தளங்களில் ஜோதிடர் ஒருவர் நாமக்கல் நரசிம்மர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து சுமார் 1 மணி நேரம் தியானம் செய்தால் சகல விதமான செல்வங்கள் கிடைக்கும் என்று கூறியதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பதிவு இணையத்தில் வைரலாகி இன்று காலையிலேயே பொதுமக்கள் திடீரென நாமக்கல் நரசிம்மர் கோவிலில் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News