தமிழ்நாடு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்

Published On 2025-02-25 08:35 IST   |   Update On 2025-02-25 08:38:00 IST
  • அரசுப் பள்ளி மாணவர்கள் 52 பேர் மலேசியா சென்றுள்ளனர்.
  • கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களும் முதன்முறையாக விமானத்தில் பயணிக்கிறார்கள்.

கல்விச் சுற்றுலாவிற்காக மாணவர்களை மலேசியா அழைத்துச் சென்றபோது விமான நிலையத்தில் ரஜினிகாந்தை சந்தித்ததாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் தளத்தில் பதிவிவிட்டுள்ளார். அதில்,

நமது அரசுப் பள்ளி மாணவர்கள் 52 பேர் மலேசியா சென்றுள்ள நிலையில், அவர்களுடன் இணைந்து கொள்வதற்காக விமான நிலையம் சென்றபோது சூப்பர் ஸ்டார் அவர்களைச் சந்தித்தோம்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி அரசுப் பள்ளி மாணவர்களை பன்னாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்கின்றோம். அவ்வகையில் இது 8-வது பயணம். தற்போது மலேசியா சென்றுள்ளார்கள் மாணவர்கள். கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களும் முதன்முறையாக விமானத்தில் பயணிக்கிறார்கள் என மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டோம். தனது ஸ்டைலில் வாழ்த்துகள் தெரிவித்தார் சூப்பர் ஸ்டார்.

"தங்களின் வாழ்த்துகளை மாணவர்களிடம் கொண்டு செல்கிறோம். அது அவர்களுக்கு ஊக்கமளிக்கும்" என தெரிவித்து விடை பெற்றோம் என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News