தமிழ்நாடு

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் சரண் விடுப்பை நிறுத்தியது யார்?- அமைச்சர்களுடன் செல்லூர் ராஜூ விவாதம்

Published On 2025-03-18 14:04 IST   |   Update On 2025-03-18 14:04:00 IST
  • அமைச்சர் துரைமுருகன்-தெரியவில்லை என்றால் கண் டாக்டரை பார்த்து கண்ணாடி போடவும்.
  • 50 ஆண்டுகள் கட்டப்படாத பள்ளிகள் எல்லாம் அழகான பள்ளிகளாக உருவாக்கியவர் எங்கள் முதலமைச்சர்.

சென்னை:

சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ (அ.தி.மு.க) பேசினார். அவரது ஒவ்வொரு கேள்விக்கும் அமைச்சர்கள் குறுக்கிட்டு பதில் அளித்தனர்.

செல்லூர் ராஜூ-அண்ணாவின் கோட்பாடுகள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளதாக கூறப்பட்டு உள்ளது. ஆனால் நிதி நிலை அறிக்கையில் ஒன்று கூட இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

அமைச்சர் துரைமுருகன்-தெரியவில்லை என்றால் கண் டாக்டரை பார்த்து கண்ணாடி போடவும்.

செல்லூர்ராஜூ- கலைஞர் கனவு இல்ல திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை விட குறைவான நிதி தான் செலவு செய்யப்பட்டு உள்ளது.

அமைச்சர் ஐ. பெரியசாமி- நீங்கள் பசுமை வீடு திட்டம் அறிவித்து இருந்தீர்கள், அதை முழுமையாக செயல்படுத்தவில்லை. நீங்கள் அறிவித்ததை நாங்கள் கட்டி வருகிறோம்.

எடுத்த உடனே எந்த திட்டத்துக்கு முழுமையாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது இல்லை. படிப்படியாக தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

செல்லூர் ராஜூ- பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் பலகோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் பெரும்பாலான பள்ளி கட்டிடம் சேதமடைந்து உள்ளது.

50 ஆண்டுகள் கட்டப்படாத பள்ளிகள் எல்லாம் அழகான பள்ளிகளாக உருவாக்கியவர் எங்கள் முதலமைச்சர்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி- அ.தி.மு.க ஆட்சியில் அதிக பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. நிறைய பள்ளிகள் கட்டப்பட்டு உள்ளது.

செல்லூர் ராஜூ- நாங்கள் 2016-ல் தனித்து நின்று வென்றோம்.

அமைச்சர் எ.வ.வேலு- இனி தமிழ்நாட்டில் தி.மு.க.வை தவிர எந்த கட்சியும் வெற்றி பெற முடியாது.

செல்லூர் ராஜூ- தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு எத்தனை பஸ்கள் வாங்கப்பட்டது என விளக்கப்படவில்லை.

அமைச்சர் சிவசங்கர்- சனிக்கிழமை காலை வந்தால் எத்தனை பஸ்கள் வாங்க உள்ளோம் என்பதை நேரில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மினி பஸ்களுக்கான அனுமதி தொடர்பாக வழித்தடங்கள் வழங்கப்பட்டு விட்டது. மே மாதம் முதல் வாரத்தில் மினி பஸ் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.

செல்லூர் ராஜூ- 4 ஆண்டுகள் ஆகி விட்டது அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு நீங்கள் எதுவும் செய்யவில்லை. சரண்டர் விடுப்பு அறிவிப்பை இந்த ஆண்டு அறிவித்து இருக்கிறீர்கள். இது அடுத்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் வர வேண்டியது

அமைச்சர் தங்கம் தென்னரசு- கொரோனா காலத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான சலுகைகளை நீங்கள் தான் நிறுத்துனீர்கள். இப்போது ஏன் நிறுத்தினீர்கள் என கேட்கிறீர்கள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை சிறையில் அடைத்தது யார்? ஆட்சியில் என்பது மனசாட்சி இருந்தால் தெரியும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Tags:    

Similar News