தமிழ்நாடு

டங்ஸ்டன் ரத்துக்கு அ.தி.மு.க.-வே காரணம்- செல்லூர் ராஜூ

Published On 2025-02-01 13:46 IST   |   Update On 2025-02-01 13:46:00 IST
  • தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு ஜோராக இருப்பது போல் முதலமைச்சர் பேசுகிறார்.
  • அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் 5 வயது முதல் மூதாட்டி வரை அனைவரும் பாதுகாக்கப்படுவர்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* அமைச்சர், முதல்வரை அழைத்து வந்தும், அண்ணாமலை, மத்திய அமைச்சரை அழைத்து வந்தும் பாராட்டு விழா நடத்துகின்றனர்.

* எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் கேள்வி கேட்ட பின்பு தான் டங்ஸ்டன் விவகாரத்தில் முடிவு கிடைத்தது.

* தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு ஜோராக இருப்பது போல் முதலமைச்சர் பேசுகிறார்.

* சமூக வலைதளங்களில் குரல் கொடுப்போர் எல்லாம் தற்போது எங்கே போனார்கள் என தெரியவில்லை.

* அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் 5 வயது முதல் மூதாட்டி வரை அனைவரும் பாதுகாக்கப்படுவர். பாலியல் வன்கொடுமை இருக்காது என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News