தமிழ்நாடு
டங்ஸ்டன் ரத்துக்கு அ.தி.மு.க.-வே காரணம்- செல்லூர் ராஜூ
- தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு ஜோராக இருப்பது போல் முதலமைச்சர் பேசுகிறார்.
- அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் 5 வயது முதல் மூதாட்டி வரை அனைவரும் பாதுகாக்கப்படுவர்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அமைச்சர், முதல்வரை அழைத்து வந்தும், அண்ணாமலை, மத்திய அமைச்சரை அழைத்து வந்தும் பாராட்டு விழா நடத்துகின்றனர்.
* எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் கேள்வி கேட்ட பின்பு தான் டங்ஸ்டன் விவகாரத்தில் முடிவு கிடைத்தது.
* தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு ஜோராக இருப்பது போல் முதலமைச்சர் பேசுகிறார்.
* சமூக வலைதளங்களில் குரல் கொடுப்போர் எல்லாம் தற்போது எங்கே போனார்கள் என தெரியவில்லை.
* அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் 5 வயது முதல் மூதாட்டி வரை அனைவரும் பாதுகாக்கப்படுவர். பாலியல் வன்கொடுமை இருக்காது என்று அவர் கூறினார்.