தமிழ்நாடு
தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி
- முதலமைச்சரின் தாயார் தயாளு அம்மாளுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
- தயாளு அம்மாளுக்கு ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை:
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள். இவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது.
இதனால் உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாயார் தயாளு அம்மாளைப் பார்ப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.