ஜெயலலிதா மற்றும் பிரதமர் பாணியை பின்பற்றும் ஸ்டிக்கர் ஸ்டாலின்.. தமிழிசை விமர்சனம்
- தன்னை அப்பா என மாணவ மாணவிகள் அழைப்பது மனதுக்கு உணர்ச்சிகரமாக இருப்பதாக முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
- பெற்றோரை கொண்டாடுவோம்' மாநாட்டில் 'அப்பா' என்ற செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே திருப்பெயரில் 'பெற்றோர்களைக் கொண்டாடுவோம்' மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. 'பெற்றோரை கொண்டாடுவோம்' மாநாட்டில் 'அப்பா' என்ற செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலி மற்றும் விழா மலரையும் அவர் வெளியிட்டார்.
கடந்த சில நாட்களாக அப்பா என்ற சொல் வைரலாகி வருகிறது. தன்னை அப்பா என மாணவ மாணவிகள் அழைப்பது மனதுக்கு உணர்ச்சிகரமாக இருப்பதாக முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் பிரதமர் மோடியை பார்த்து காப்பி அடிப்பதாக பாஜக தலைவர்களில் ஒருவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
அம்மா என்று அழைக்கப்பட்ட ஜெயலலிதா அவர்களைப் பார்த்து அப்பா என்று அழையுங்கள் என கூறிவருகிறார் எனவும் பிரதமர் மருந்தகங்களை பார்த்து முதலமைச்சர் மருந்தகங்கள் எனவும் முதலமைச்சர் முக ஸ்டாலின் காப்பி அடிப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
அப்பா என்ற அழையுங்கள்... அம்மா என்று அழைக்கப்பட்ட ஜெயலலிதா அவர்களைப் பார்த்து ஸ்டிக்கர்
முதலமைச்சர் மருந்தகங்கள்...
பிரதமர் மோடி அவர்களின்.. பிரதமர் மருந்தகங்களை பார்த்து. ...ஸ்டிக்கர்
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
என்ற. திரு எம் ஜி ஆர் அவர்களின். பாடலைப் பாடி திரு எம் ஜி ஆர் அவர்களைப் பார்த்து ஸ்டிக்கர் ...
#ஸ்டிக்கர் ஸ்டாலின்
என கூறினார்.