தமிழ்நாடு

4 எம்.எல்.ஏ.க்கள், 2 எம்.பி.க்கள் இருந்தும் கொடி கூட ஏற்ற முடியவில்லை - திருமாவளவன் ஆதங்கம்

Published On 2025-03-02 09:51 IST   |   Update On 2025-03-02 09:51:00 IST
  • அதிகாரிகளை செயல்பட வைக்க அரசியல் ரீதியாக வலிமைபெற வேண்டும்.
  • எளிய மக்களுக்கான திட்டங்களை அமல்படுத்துவதில் பெரிய போராட்டம் உள்ளது.

சென்னை:

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நடைபெற்ற தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டம் சட்டம் & விதிகள் 2024! நடைமுறைப்படுத்துதல்,கண்காணித்தல், வலுப்படுத்துதல் சமூக அமைப்புகள் மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

* 4 எம்.எல்.ஏ.க்கள், 2 எம்.பி.க்கள் இருந்தும் கொடி கூட ஏற்ற முடியவில்லை.

* அதிகாரத்தில் இருப்பவர்களோடு இணைந்து கோரிக்கையை நிறைவேற்றி கொள்வதே வாய்ப்பாக உள்ளது.

* அதிகாரிகள் நல்ல பதிலை கூறினாலும் ஒன்றும் நடப்பதில்லை.

* விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடியேற்றும்போதுதான் அதிகாரிகள் சட்டம் பேசுகின்றனர்.

* அதிகாரிகளை செயல்பட வைக்க அரசியல் ரீதியாக வலிமைபெற வேண்டும்.

* எளிய மக்களுக்கான திட்டங்களை அமல்படுத்துவதில் பெரிய போராட்டம் உள்ளது.

* அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கும் அனைத்தும் நடைமுறைக்கு வந்தாலே இந்தியா இந்நேரம் ஒரு சமத்துவம் உள்ள தேசமாக எப்போதோ பரிணாமம் அடைந்திருக்கும். ஆனால் அதுவே இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை என்றார். 

Tags:    

Similar News