தமிழ்நாடு
தமிழ்நாடு பட்ஜெட்டை சென்னையில் 100 இடங்களில் நேரலை செய்ய சிறப்பு ஏற்பாடு
- பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
- தமிழ்நாடு பட்ஜெட் சென்னையில் 100 இடங்களில் நேரலை செய்ய ஏற்பாடு.
தமிழக சட்டசபையில், இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் கூடியது. கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தும் நிகழ்வோடு தொடங்கி அந்த கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது. சட்டசபையின் அடுத்த கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
இந்த நிலையில், நாளை தாக்கல் செய்யப்படும் தமிழ்நாடு பட்ஜெட்டை சென்னையில் 100 இடங்களில் நேரலை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்கள், மெரினா கடற்கரை, பாண்டி பஜார் சாலை, டைடல் பார்க் சந்திப்பு, கிண்டி பேருந்து நிலையம் என மக்கள் அதிகம் கூடும் 100 பகுதிகளில் பட்ஜெட் நேரலை செய்யப்பட இருக்கிறது.