கோடைக்காலத்தில் தடையில்லா மின் விநியோகம்: அமைச்சர் செந்தில் பாலாஜி
- ஏப்ரல், மே மாதங்களுக்கு கூடுதலாக தேவைப்படும் மின்சாரத்திற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.
- கோடைக்காலத்தில் 22 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் தேவைப்படும்.
கோடைக்காலத்தில் தடையின்றி சீரான மின்சார விநியோகம் செய்வது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:-
* கோடைக்காலத்தில் தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பாக தலைமை பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
* கோடைக்காலத்தில் தடையில்லாமல் சீரான மின் விநியோகம் செய்ய ஏற்பாடு.
* ஏப்ரல், மே மாதங்களுக்கு கூடுதலாக தேவைப்படும் மின்சாரத்திற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.
* கோடைக்காலத்தில் 22 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் தேவைப்படும்.
* தமிழ்நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 78 ஆயிரம் மின்மாற்றிகள் நிறுவப்பட்டுள்ளன.
* 3-ல் ஒரு பங்கு காலிப்பணியிடங்கள் உள்ளன.
* மின்சாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் அவசியமான இடங்கள் நிரப்பப்படும்.
* துணை மின்நிலையங்களில் காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
* 2030ஆம் ஆண்டுக்குள் மின்வாரியம் மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை
இவ்வாறு செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.