2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைப்போம்- இபிஎஸ்
- சென்னை கோட்டைக்கு செல்வதற்கு வேலூர் கோட்டையில் இணைந்திருக்கிறோம்.
- இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.
வேலூர் மாவட்டம், கோட்டை மைதானத்தில் அதிமுகவின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மண்டல மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றி வருகிறார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்திலேயே இளைஞர்கள் அதிகமுள்ள இயக்கம் அதிமுகதான். கோட்டையில் இருப்பவர்களை வீட்டிற்கு அனுப்பும் கூட்டம் இது.
சென்னை கோட்டைக்கு செல்வதற்கு வேலூர் கோட்டையில் இணைந்திருக்கிறோம். இப்படை தோற்கின் எப்படை வெல்லும். 100 இளைஞர்களை தாருங்கள் உலகத்தையே மாற்றி காட்டுகிறேன் என விவேகானந்தர் கூறினார்.
எம்ஜிஆர் காலத்திலும், புரட்சித்தலைவி காலத்திலும் சரி அதிமுக யாரையும் நம்பி இருந்ததில்லை. அதிமுக இயக்கம் மக்களையும், தொண்டர்களையும் மட்டுமே நம்பி இருக்கிறது.
பெண்கள் தன்னை அப்பா என்று அழைப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறிக் கொள்கிறார். எதிர்க்கட்சியாக இருந்தபோது Go back என்ற ஸ்டாலின், தற்போது வெல்கம் மோடி என்கிறார்.
அதிமுகவுக்கு கூட்டணி வேறு, கொள்கை வேறு; கொள்கையே இல்லாத கட்சி திமுக. அதிமுகவைப் பற்றி பேச முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தகுதியில்லை.
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைப்போம். நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது திமுக.
இவ்வாறு அவர் பேசினார்.