உலகம்

பாகிஸ்தானில் நிவாரண பொருட்கள் ஏற்றிச்சென்ற வாகனங்கள் மீது துப்பாக்கி சூடு

Published On 2025-02-18 11:49 IST   |   Update On 2025-02-18 11:49:00 IST
  • லாரி டிரைவர் பலி, போலீஸ்காரர் உள்பட 15 பேர் காயம் அடைந்தனர்.
  • நிவாரண பொருட்கள் ஏற்றிய லாரிகள் வேறு பாதையில் திரும்பி விடப்பட்டன.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள குர்ரம் மாவட்டத்தில் இரு பிரிவு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. வன்முறை பாதிக்கப்பட்ட குர்ரம் மாவட்டத்திற்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தால் பகுதியில் இருந்து குர்ரமுக்கு நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரிகள் அணிவகுத்து சென்றன. அப்போது ஓச்சிட் என்ற பகுதியில் மர்ம நபர்கள், லாரிகள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். இதில் ஒரு லாரி டிரைவர் பலியானார். ஒரு போலீஸ்காரர் உள்பட 15 பேர் காயம் அடைந்தனர்.

இதேபோல் பாகன், மண்டோரி, டாட் கமர் மற்றும் சார் கேல் உள்பட பல இடங்களிலும் தாக்குதல் நடந்தது. இதையடுத்து நிவாரண பொருட்கள் ஏற்றிய லாரிகள் வேறு பாதையில் திரும்பி விடப்பட்டன.

இந்த தாக்குதலுக்கு கைபர் பக்துன்க்வா மாகாண முதல்-மந்திரி லி அமின் கந்தாபூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைதியைக் குலைக்கும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News