உலகம் (World)

ராபா கிராசிங் திறப்பு எதிரொலி: காசாவில் இருந்து வெளியேற காத்திருக்கும் வெளிநாட்டவர்

Published On 2023-11-01 10:00 GMT   |   Update On 2023-11-01 10:00 GMT
  • இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
  • எகிப்தின் ராபா எல்லை வழியாக காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

காசா:

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தனது ஆதரவை அளித்து வருகிறது.

இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கி எகிப்தின் ராபா எல்லை வழியாக காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க இஸ்ரேல் சம்மதித்தது.

இதையடுத்து, நிவாரணப் பொருட்கள் அடங்கிய லாரிகள் காசாவுக்குள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காசாவில் இருந்து எகிப்து நாட்டின் ராபா எல்லை வழியாக வெளியேறுவதற்காக வெளிநாட்டினர் 12 பேர் காத்திருக்கின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போர் தொடங்கிய 3 வார காலத்துக்குப் பிறகு காசாவில் இருந்து வெளிநாட்டவர்கள் வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News