உலகம்

அமெரிக்காவில் பாதுகாப்பு துறையில் 5,400 பேர் பணிநீக்கம்

Published On 2025-02-23 07:29 IST   |   Update On 2025-02-23 07:29:00 IST
  • சிக்கன நடவடிக்கையாக பல்வேறு துறையில் ஆட்குறைப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • ராணுவ வீரர்களுக்கு இந்த பணிநீக்கத்தில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

வாஷிங்டன்:

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்றார். அதன்பிறகு பொருளாதாரம், நிர்வாகத்தில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். மேலும் சிக்கன நடவடிக்கையாக பல்வேறு துறையில் ஆட்குறைப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் நாட்டின் மிகப்பெரிய துறையான ராணுவத்தில் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். அவர்களில் 8 சதவீதம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதன் முதல்கட்டமாக தற்போது 5 ஆயிரத்து 400 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இதில் பெரும்பாலானோர் வருடத்துக்கும் குறைவான அனுபவம் கொண்ட தகுதிகாண் நிலையில் உள்ளவர்கள் ஆவர். அதேசமயம் ராணுவ வீரர்களுக்கு இந்த பணிநீக்கத்தில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் வனத்துறையில் இருந்து 2 ஆயிரம் பேரும், உள்நாட்டு வருவாய் சேவை துறையில் இருந்து 7 ஆயிரம் பேரும் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags:    

Similar News