உலகம்

நேட்டோ மாநாடு: இஸ்ரேல் உயர் அதிகாரிக்கு அழைப்பு விடுத்த அமெரிக்கா

Published On 2024-06-29 12:11 GMT   |   Update On 2024-06-29 12:11 GMT
  • நேட்டோ மாநாடு ஜூலை 9-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
  • நேட்டோ அமைப்பு தொடங்கி 75 வருடங்கள் ஆன நிலையில் அமெரிக்கா பல்வேறு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

நேட்டோ மாநாடு அடுத்த மாதம் 9-ந்தேதியில் இருந்து 11-ந்தேதி வரை அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடக்கிறது. இதில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கலந்து கொள்கிறார். நேட்டோ அமைப்பின் 75-வது ஆண்டு விழாவாக இந்த மாநாடு அமைகிறது.

இதனால் அமெரிக்கா இஸ்ரேல் நாட்டின் வெளியறவுத்துறை மந்திரி கட்ஸ்-க்கு அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் பிட்ஸ்-க்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இஸ்ரேலைத் தொடர்ந்து பல அரபு நாடுகளுக்கும் அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் உள்பட 32 நாடுகள் நேட்டோவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் நேட்டோவில் இணைய விரும்பியதால் ரஷியா அந்த நாடு மீது படையெடுத்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News