புதுச்சேரி

பயிற்சி நிறைவு விழாவில் முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் ஜான்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். 

பேரிடர் மேலாண்மை பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்

Published On 2022-10-23 11:52 IST   |   Update On 2022-10-23 11:52:00 IST
  • மத்திய அரசின் ஆப்த மித்ரா என்ற பேரிடர் கால நண்பன் திட்டத்தின் கீழ் சமூக தன்னார்வலர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி கடந்த 10-ந் தேதி முதல் வழங்கப்பட்டது.
  • பயிற்சியின் நிறைவு விழா கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜர் மணி மண்டபத்தில் நடந்தது.

புதுச்சேரி:

மத்திய அரசின் ஆப்த மித்ரா என்ற பேரிடர் கால நண்பன் திட்டத்தின் கீழ் சமூக தன்னார்வலர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி கடந்த 10-ந் தேதி முதல் வழங்கப்பட்டது. இதில் 150 தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

பயிற்சியின் நிறைவு விழா கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜர் மணி மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் ஜான்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வல்லவன், துணை கலெக்டர் தமிழ்ச் செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News