புதுச்சேரி

பாதாள சாக்கடை இணைக்கும் பணியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

அப்துல் கலாம் அரசு குடியிருப்பு பகுதியில் பாதாள சாக்கடை இணைக்கும் பணி

Published On 2023-11-27 05:57 GMT   |   Update On 2023-11-27 05:57 GMT
  • அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
  • பொதுப்பணித் துறை சார்பில் ரூ.37 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணி களுக்கான தொடக்க விழா நடந்தது.

புதுச்சேரி:

உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட அப்துல் கலாம் அரசு குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் வெளியேற்றுதலை பாதாள சாக்கடையுடன் இணைக்க பொதுப்பணித் துறை சார்பில் ரூ.37 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணி களுக்கான தொடக்க விழா நடந்தது.

இதில் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென் னடி கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், செயற்பொறியாளர் சீனு, உத விப்பொறியாளர் ஞானம், பார்த்தசாரதி இளநிலைப் பொறியாளர் ஜெயசந்திரன், தி.மு.க. நிர்வாகிகள் ராஜா கோபால், தங்கவேல், சக்திவேல், ஹரிகிருஷ்ணன், ராஜி, விநாயகமூர்த்தி, ஜோஸ் லின், ராகேஷ், மோரிஸ், ரகுமான், பாஸ்கல் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News