புதிய கேஜெட்டுகள்

புரோஃபஷனல் ஏஐ கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போன் - விரைவில் அறிமுகம்

Published On 2024-07-01 08:11 GMT   |   Update On 2024-07-01 08:11 GMT
  • ரியல்மி 12 ப்ரோ சீரிசின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும்.
  • ப்ளிப்கார்ட் தளத்தில் மைக்ரோசைட் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

ரியல்மி நிறுவனத்தின் புதிய 13 ப்ரோ 5ஜி சீரிஸ் மாடல்கள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதையொட்டி புதிய ஸ்மார்ட்போனின் டீசர்களை ரியல்மி இந்தியா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்கள் எப்போது அறிமுகமாகும் என்பது பற்றி சரியான தேதி அறிவிக்கப்படவில்லை. புது ஸ்மார்ட்போன்கள் ரியல்மி ஏற்கனவே விற்பனை செய்து வரும் ரியல்மி 12 ப்ரோ சீரிசின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்று தெரிகிறது.

ரியல்மி 13 ப்ரோ 5ஜி சீரிஸ் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. புது ஸ்மார்ட்போனிற்காக ப்ளிப்கார்ட் தளத்தில் மைக்ரோசைட் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ரியல்மி 13 ப்ரோ 5ஜி சீரிஸ் இந்திய விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெறும் என்று தெரியவந்துள்ளது.

 


புதிய ப்ரோ சீரிசில் ரியல்மி 13 ப்ரோ 5ஜி மற்றும் ரயில்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது. முதற்கட்ட டீசர்களில் ரியல்மி 13 ப்ரோ சீரிஸ் மாடல்களில் ஏ.ஐ. சார்ந்து இயங்கும் கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இத்துடன் பல்வேறு முதல் முறை (இதுவரை மற்ற மாடல்களில் வழங்கப்படாத) அம்சங்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது.

ரியல்மி 13 ப்ரோ பிளஸ் மாடலில் 50MP IMX882 3x பெரிஸ்கோப் லென்ஸ் மற்றும் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 3 பிராசஸர் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இது ரியல்மியின் முதல் புரோஃபஷனல் ஏஐ கேமரா கொண்ட ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இதுகுறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை. 

Tags:    

Similar News