டென்னிஸ்

குரோசியா ஓபன்: அரையிறுதியில் ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி

Published On 2024-07-27 10:08 GMT   |   Update On 2024-07-27 10:08 GMT
  • குரோசியா ஓபன் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி சுற்று நடந்தது.
  • ரஷிய வீரர் ரூப்லெவ் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.

ஜாக்ரெப்:

குரோசியா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றுகள் நேற்று நடந்தன.

இதில் ரஷிய வீரர் ரூப்லெவ், அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ செரண்டலோவை சந்தித்தார்.

இந்தப் போட்டியின் முடிவில் ரூப்லெவ் 6-7 (6-8), 4-6 என்ற செட்கணக்கில் தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.

இதில் வெற்றி பெற்ற பிரான்சிஸ்கோ, இன்று இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் இத்தாலி வீரர் முசெட்டியை சந்திக்கிறார்.

Tags:    

Similar News