search icon
என் மலர்tooltip icon
    TNLGanesh

    About author
    அச்சு ஊடக துறையில் 12 வதுஆண்டு பயணம். மலை பயணமும்,மழையில் பயணமும் பிடித்தமான ஒன்று. படைப்பியலில் அதிக ஆர்வம் . இயற்கையின் அழகை தனிமையில் ரசிக்க பிடிக்கும். நகர்வுகளை கண்டறிய பிடிக்கும். நான் தமிழின் மூத்த மகன் என்பதில் பெருமை.
      • கார்த்திகை மாதத்தில் சோமவாரம் பெண்களால் கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
      • நாகர் சிலைகளுக்கு பால், பழங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

      தென்காசி:

      கார்த்திகை மாதம் என்றாலே அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து சபரிமலை செல்வது வழக்கம். அதேபோல் கார்த்திகை மாதத்தில் சோமவாரம் பெண்களால் கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதன்படி இந்த ஆண்டு சோமவாரம் இன்று காலை முதல் கடைபிடிக்கப்பட்டது.

      இதற்காக குற்றாலத்தில் அதிகாலை முதல் பெண்கள் கூட்டம் அலைமோதியது. குற்றாலநாதர் கோவில் அருகே உள்ள நாகர் சிலைகளுக்கு பால், பழங்கள் கொண்டு அபிஷேகம் செய்து பெண்கள் கற்பூரம் ஏற்றி பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்து சோமவரத்தை கடைப்பிடித்தனர்.

      • நேற்று காலை சுவாமி தேரில் எழுந்தருளும் வைபவமும், தொடர்ந்து தேரோட்டமும் நடைபெற்றது.
      • விரதமிருக்கும் பக்தர்கள் தரையில் விழுந்து கும்பிடு சரணம் வழிபாடு செய்து நேர்த்தி கடனை செலுத்துவர்.

      கடையநல்லூர்:

      தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலை குமாரசுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா 10 நாள்கள் நடைபெற்றது. இவ்விழாவில் தினமும் காலை, மாலை சுவாமி புறப்பாடு, சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருமலைக்கோவில் மலையடிவாரமான வண்டாடும் பொட்டலில் 17-ந் தேதி பெருந்திருப்பாவாடை நடைபெற்றது. நேற்று முன்தினம் சூரசம்ஹாரம் நடைபெற்றது. நேற்று காலை சுவாமி தேரில் எழுந்தருளும் வைபவமும், தொடர்ந்து தேரோட்டமும் நடைபெற்றது. தமிழகத்தில் முருகன் கோவில்களில் ஒன்றான பண்பொழி திருமலை குமாரசாமி கோவிலில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் விரதமிருக்கும் நூற்றுக்கணக்கான ஆண் மற்றும் பெண் பக்தர்கள் தரையில் விழுந்து கும்பிடு சரணம் வழிபாடு செய்து நேர்த்தி கடனை செலுத்துவர். இந்தாண்டு ஏற்கெனவே மழை பெய்து தேர் செல்லும் பாதை ஈரமான நிலையில் இருந்த போதும் பக்தர்கள் தரையில் விழுந்து கும்பிடு சரணம் நேர்த்திக் கடனை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

      • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் சுரண்டையில் தொடங்கிய பேரணி பாவூர்சத்திரம் வருகை தந்தது.
      • கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் ஒன்றிய செயலாளர் சீனித்துரை தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

      தென்காசி:

      தி.மு.க. இளைஞரணி மாநாடு சேலத்தில் அடுத்த மாதம் 17-ந் தேதி நடை பெறுகிறது. இதனையொட்டி இளை ஞரணி நிர்வாகிகள் கன்னியாகுமரியில் இருந்து சேலம் வரை 234 தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் திட்டமிட்டு இரு சக்கர வாகன பேரணியை நடத்தி வருகின்றனர். இந்த பேரணியானது தென்காசி மாவட்ட பகுதிகளுக்கு வருகை தந்தது.

      தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் சுரண்டையில் தொடங்கிய பேரணி பாவூர்சத்திரம் வருகை தந்தது.

      பேரணிக்கு கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பாவூர்சத்திரம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் ஒன்றிய செயலாளர் சீனித்துரை தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ், கல்லூரணி ஊராட்சி தலைவர், குல சேகரப்பட்டி மதிச்செல்வன், நிர்வாகிகள் குருசிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

      • விழா நாட்களில் தினமும் காலை, மாலை சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.
      • திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

      தென்காசி:

      பாவூர்சத்திரம் காமராஜர்நகர் வென்னிமலை வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

      இதையொட்டி அன்று காலையில் கும்பஜெபம், மூலமந்திர ஹோமம், யாகசாலை பூஜை, சஷ்டி ஹோமம், விஷேச அபிஷேகம், தீபாராதனையும் மாலையில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. நேற்று இரவு சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

      • வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் அணி தலைவர் விசுவராஜ் விவசாயிகளுக்கு வெங்காயம், சிறுகிழங்கு சாகுபடி செய்வது குறித்து பயிற்சியளித்தார்.
      • ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன் விவசாயிகளுக்கு சட்டி, மம்பட்டி, களவெட்டி வழங்கினார்.

      கடையம்:

      கடையம் யூனியனுக்கு உட்பட்ட கோவிந்தபேரி ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில், திட்டத்தின் அணி தலைவர் விசுவராஜ் கலந்து கொண்டு 90 விவசாயிகளுக்கு வெங்காயம், சிறுகிழங்கு சாகுபடி செய்வது குறித்து பயிற்சியளித்தார். பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன் விவசாயிகளுக்கு உபகரணங்களான சட்டி, மம்பட்டி, களவெட்டி போன்றவற்றை வழங்கினார். இதில் துணைத்தலைவர் இசேந்தரன், 5-வது வார்டு உறுப்பினர் ராஜா, 4-வது வார்டு உறுப்பினர் சுகிதா மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

      • சஷ்டியை முன்னிட்டு சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
      • நிகழ்ச்சியில் செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

      செங்கோட்டை:

      செங்கோட்டையில் உள்ள குலசேகரநாதர் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சஷ்டியை முன்னிட்டு காலை 10 மணிக்கு சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதனை தொடர்ந்து மாலை வெள்ளிமயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி இடம்பெற்றது.

      அதனைத்தொடர்ந்து சுப்பிரமணியர் ஆனைமுகம், சிங்கமுகம், மகாசூரன் ஆகிய முகங்களை கொண்ட சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. 3 முக்கிய பகுதிகளில் நடந்த இந்த நிகழ்ச்சியில் செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷங்களை எழுப்பி, முருகப்பெருமானை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.

      • விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.
      • நிகழ்ச்சியை காண பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

      தென்காசி:

      பாவூர்சத்திரம் காமராஜர் நகர் வென்னிமலை வள்ளி தேவசேனா சமேத சுப்பிர மணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 13-ந்தேதி தொடங்கி இன்று வரை நடைபெறுகிறது. இதையொட்டி காலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், 6 மணிக்கு கொடியேற்றமும் நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

      விழா நாட்களில் தொடர்ந்து தினமும் காலை, மாலையில் பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. இதையொட்டி காலையில் கும்ப ஜெபம், மூலமந்திர ஹோமம், யாகசாலை பூஜை, சஷ்டி ஹோமம், விஷேச அபிஷேகம், தீபாரா தனையும், மாலையில் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடைபெற்றது.

      நிகழ்ச்சியை காண பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று இரவு திருக்கல்யாணம் நடை பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

      • சித்ரா 10-ம் வகுப்புடன் பள்ளி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
      • விஷப்பூச்சி கடித்ததால் சித்ரா வலி தாங்க முடியாமல் அலறினார்.

      கடையம்:

      கடையம் அருகே உள்ள தெற்கு மடத்தூரை சேர்ந்தவர் சுரேஷ். விவசாயி. இவரது மகள் சித்ரா(வயது 17). இவர் 10-ம் வகுப்புடன் பள்ளி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

      நேற்றிரவு வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு சித்ரா தனது பெற்றோருடன் தூங்கி கொண்டிருந்தார்.

      இன்று அதிகாலை 1 மணிக்கு அவரை விஷப்பூச்சி ஒன்று கடித்தது. உடனே எழுந்த சித்ரா வலி தாங்க முடியாமல் அலறினார். மேலும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

      உடனே அவரை அவரது பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக தென்காசிக்கு கொண்டு சென்றனர்.

      அங்கிருந்து மேல்சிகிச்கை க்காக அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • போட்டியில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
      • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம், தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

      தென்காசி:

      தேசிய கல்வி மற்றும் மனித வள மேம்பாட்டு அமைப்பால் இந்தியா ஸ்வச் பாரத் என்னும் தேசிய அளவிலான கையெழுத்துப் போட்டி, கட்டுரை போட்டி, வண்ணம் தீட்டுதல் போட்டி, படம் வரைதல் போட்டி மற்றும் போஸ்டர் தயாரித்தல் போன்ற பல்வேறு வகையான போட்டிகளை இந்தியா முழுவதும் நடத்தியது.

      பல்வேறு மாநிலத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ, மாணவிகள் தேசிய அளவில் முதல் இடத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

      இதில் 5-ம் வகுப்பு மாணவன் அபினவ் ஜெய் வண்ணம் தீட்டுதல் போட்டியிலும், 7-ம் வகுப்பு மாணவன் முஹம்மது சுலை மான் கையெழுத்து போட்டி யிலும் தேசிய அளவில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம், தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

      மேலும் 12 பேர் கையெழுத்து போட்டியிலும், 3 பேர் வண்ணம் தீட்டுதல் போட்டியிலும், 3 பேர் கட்டுரை போட்டியிலும் பள்ளி அளவில் முதலிடம் பெற்றனர். பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகள் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளை பள்ளி தாளாளர் சேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டினர்.

      • விழாவையொட்டி தினமும் அன்னதானம் மலைக்கோவிலில் வழங்கப்பட்டது.
      • சூரசம்ஹாரம் நிறைவு பெற்றதும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

      சிவகிரி:

      சிவகிரி ஜமீனுக்கு பாத்தியப்பட்ட கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 13 -ந்தேதி கந்த சஷ்டி விழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜை வழிபாடு, சுவாமி சப்பர வீதிஉலா வருதல் நடைபெற்றது. தினமும் அன்னதானம் மலைக்கோவிலில் வழங்கப்பட்டது.

      கந்த சஷ்டி முக்கிய நாளான நேற்று மாலையில் சூரனை வதம் செய்வதற்காக குதிரை வாகனத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். பின்னர் நகரின் மேலரத வீதியில் முதலில் யானைமுகம் கொண்ட சூரனையும், பின்னர் சிங்கமுகம் கொண்ட சூரனையும், இறுதியில் ஏழாம் திருநாள் மண்டபம் முன்பாக சூரபத்மனையும் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி வழிபட்டனர். சூரசம்ஹாரம் நிறைவு பெற்றதும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் விரதம் இருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சிவகிரி ஜமீன்தார் விக்னேஷ் என்ற சின்னத்தம்பியார் தலைமையில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

      இதபோல் சிவகிரி அருகே கூடலூர் நாதகிரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில், தென்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகிய கோவில்களிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

      • ஆய்வின்போது உள் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், குறைகளை கிருஷ்ண முரளி எம்.எல்.ஏ. கேட்டறிந்தார்.
      • கிருஷ்ண முரளி எம்.எல்.ஏ.விடம் ரூ.5 லட்சம் மதிப்பில் 2 கருவிகளையும் வாங்கித் தருமாறு தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன் கோரிக்கை விடுத்தார்.

      செங்கோட்டை:

      செங்கோட்டையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் கடையநல்லூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கிருஷ்ண முரளி திடீர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு சிகிச்சை பெறும் உள் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார்.

      இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டு, பெண்கள் வார்டு மற்றும் குழந்தைகள் வார்டுகளில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணனிடம் அவர் கேட்டறிந்தார். அப்போது செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன், கிருஷ்ண முரளி எம்.எல்.ஏ. விடம் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு மயக்க மருந்து கொடுப்பதற்கு பாய்ல்ஸ் அப்பாரட்டஸ் என்ற கருவியும், ஸ்கேன் எடுப்பதற்கு அல்ட்ரா சோனோகிராம் அப்டாமன் என்ற கருவியும் அவசரமாக தேவை ப்படுவதால் ரூ.5 லட்சம் மதிப்பில் 2 கருவிகளையும் வாங்கித் தருமாறு கோரிக்கை விடுத்தார்.

      அந்த கருவிகள் வாங்குவதற்கு நடவடி க்கை எடுப்பதாக கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. உறுதி அளித்தார். ஆய்வின் போது, தென்காசி வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் பொய்கை மாரியப்பன், நகர செயலாளர் கணேசன் மற்றும் அரசு மருத்துவர்கள், மருத்துவமனை பணியாளா்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

      • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
      • மருத்துவர் அக்கினோ விமல் நவீன பாடத்திட்டமுறைகளை பற்றி சிறப்புரையாற்றினார்.

      தென்காசி:

      தென்காசி அருகே உள்ள பழைய குற்றாலம் மவுண்ட் ஹில்டன் பப்ளிக் பள்ளியின் புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் போதகர் ஜான் கென்னடி யின் சிறப்பு பிரார்த்தனையுடன் ஆவுடையானூர் மருத்துவர் சி. தர்மராஜ் பள்ளிக் கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

      அதனைத் தொடர்ந்து தென்காசி கலெக்டர் ரவிச்சந்திரன் பள்ளியின் கல்வெட்டை திறந்து வைத்தார். பின்னர் கலெக்டர் ரவிச்சந்திரன், மருத்துவர்கள் அன்புமலர், மதுபாலா, ராஜேஸ்வரி, தார்ஷினி சினோலா விமல் மற்றும் பள்ளியின் செயலாளர் கிரேஸ் கஸ்தூரி பெல் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர்.

      மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தொடர்ந்து சாரா லாசர் பிரார்த்தனை செய்தார். பள்ளியின் முதல் தளம் போதகர் ஜெப ரெத்தினம் , இரண்டாவது தளம் போதகர் கிங்ஸ்லி ஜான் ஆகியோரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

      போதகர் ஜெயஹர் தாமஸ் பள்ளியின் கலைய ரங்கத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தை பிரார்த்தனை யுடன் தொடங்கி வைத்தார். பள்ளியின் இயக்குநர் மருத்துவர் பிராம்டன் ரெத்தின பெல் வரவேற்றார். மருத்துவர் திருவன், மருத்துவர் தர்மராஜை அறிமுகப்படுத்தி னார். ராம்ஜி, மருத்துவர் அக்கினோ விமல், ஐ.எப்.எஸ், நார்வே ராஜ்ஜியத்திற்கான இந்திய அரசு தூதுவரை அறி முகப்படுத்தினார்.

      தொடர்ந்து பேசிய மாவட்ட கலெக்டர் தென்காசி மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்குவதை தமது சிறப்புரையில் குறிப்பிட்டார். மருத்துவர் அக்கினோ விமல் நவீன பாடத்திட்டமுறைகளை பற்றி சிறப்புரையாற்றினார். முக்கியப் பிரமுகர்களாக கடையநல்லூர் எம்.எல்.ஏ. கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா, குற்றாலம் பேரூராட்சி தலைவர் கணேஷ் தாமோதர பாண்டியன், ஆயிரப்பேரி ஊராட்சி தலைவர் சுடலையாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

      விழாவை பள்ளி தாளாளர் ஆர்.ஜே.வி.பெல், பள்ளி செயலாளர் கிரேஸ் கஸ்தூரி பெல், பள்ளி இயக்குநர் மருத்துவர் பிராம்டன் ரெத்தின பெல், பள்ளி அறங்காவலர் தார்ஷினி ஷினோலா, டாக்டர் பபிதா ஆகியோர் பள்ளி திறப்பு விழாவை ஒருங்கிணைத்தனர். முடிவில் பள்ளியின் தாளாளர் ஆர்.ஜே.வி. பெல் நன்றி கூறினார்.

      ×